90,000 வேலைக்கு 2.8 கோடி விண்ணப்பம்: அதிகாரிகள் அதிர்ச்சி

90,000 வேலைக்கு 2.8 கோடி விண்ணப்பம்: அதிகாரிகள் அதிர்ச்சி
90,000 வேலைக்கு 2.8 கோடி விண்ணப்பம்: அதிகாரிகள் அதிர்ச்சி

இந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளது அதிகாரிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.


நாட்டின் மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையாக உள்ள ரயில்வே துறையில் தற்போது 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்ஜின் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், தச்சர்கள், ரயில்பாதை கண்காணிப்பு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான பணிகளுக்காக ஏறத்தாழ 90 ஆயிரம் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்களை ரயில்வே தேர்வு செய்ய உள்ளது. இந்தப் பணிகளை நிரப்ப, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மாதம் விளம்பரம் வெளியிட்டது. இந்நிலையில் 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com