நெல்லை மாவட்டத்தில் எலுமிச்சை விளைச்சலுக்கு பெயர் பெற்ற கடையம் ஊராட்சி, தற்போது போதிய நீரின்றி விளைச்சல் பாதித்ததால் ஏற்றுமதியும் குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அழகிய கிராமமான கடையம், எலுமிச்சை விவசாயத்திற்கு பெயர் பெற்றது. கடையம் ஊராட்சியில 23 பஞ்சாயத்தும், 84 குக்கிராமங்களும் இருக்கிறது. இந்த குக்கிராமங்கள் அனைத்திலும் எலுமிச்சை விளைவிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்யாத நிலையில் குளங்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மரங்கள் கருகி நின்று விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளன.
ஐந்தில் ஒருபங்கே விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், கடையம் மொத்த கமிஷன் கடைக்கு நாளொன்றுக்கு 500 மூடைகள் வந்த இடத்தில் தற்போது 100 மூடைகள் மட்டுமே வருவதாக கூறுகிறார்கள் விவசாயிகள். தேவை அதிகம் உள்ள கோடைக்காலத்தில் எலுமிச்சை விளைச்சல் சரிந்தது விவசாயிகளின் பொருளாதாரத்தை பின்னடைய வைத்துள்ளது. குளங்கள் மற்றும் நீர் வரத்து பாதைகளை தூர் வாரி பிரசித்திபெற்ற கடையம் எலுமிச்சை விவசாயம் அழியாமல் காக்க வேண்டும் என்றும். கருகிய மரங்களுக்கு மாற்றாக புதிதாக அரசே எலுமிச்சை கன்றுகளை மானியமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Loading More post
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!