பகலில் சமையல்; இரவில் கொள்ளை- சென்னையைக் கலக்கியவர் கைது

பகலில் சமையல்; இரவில் கொள்ளை- சென்னையைக் கலக்கியவர் கைது
பகலில் சமையல்; இரவில் கொள்ளை- சென்னையைக் கலக்கியவர் கைது

சென்னையில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளான வடபழனி, தியாகராயர் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நிகழ்வதாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக ரோந்து பணியை தீவிரப்படுத்திய காவல்துறையினர் வடபழனி 100 அடி சாலையில் கடப்பாரையுடன் சுற்றி திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர வைக்கும் தகவல்கள் வெளி வந்தன.

அந்த இளைஞனின் பெயர் வஜ்ரூதீன் என்ற சிவா என்பதும் அவர் கையில் வைத்திருந்த கடப்பாரை வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்தியது என்பதும் தெரியவந்தது. பகல் நேரங்களில் திருமண நிகழ்ச்சிகளில் சமையல் பணியில் ஈடுபட்டு வந்த சிவா, தான் திட்டம்தீட்டி வைத்திருக்கும் இடத்திற்கு இரவில் சென்று நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து வந்துள்ளார். கொள்ளையடிக்கும் நகைகளை பாரிமுனையில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் கொடுத்து தங்க காசாக மாற்றி அதனை பணமாக்கி ஜாலியாக வலம் வந்துள்ளார் சிவா. அவ்வாறு சிவா வைத்திருந்த 51 சவரன் தங்க காசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோடம்பாக்கம் ராகவன் காலனியில் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்ததை சிவா ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விருகம்பாக்கத்தில் 2 கடைகளிலும், வடபழனியில் ஒரு வீட்டிலும் இவர் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சீர்காழி, புதுக்கோட்டை, மன்னார்குடி மற்றும் சென்னையில் கோடம்பாக்கம், பள்ளிக்கரணை காவல் நிலையங்களில் சிவா மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிவாவின் கூட்டளி ஒருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com