ஹோலி கொண்டாடிய தலித் வாலிபர் அடித்துக்கொலை

ஹோலி கொண்டாடிய தலித் வாலிபர் அடித்துக்கொலை
ஹோலி கொண்டாடிய தலித் வாலிபர் அடித்துக்கொலை

ஹோலி கொண்டாடிய தலித் இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ளது, பிவாடி கிராமம். இந்தப் பகுதியை சேர்ந்தவர் நீரஜ். வயது 16. நேற்று ஹோலி பண்டிகை என்பதால் இவர் வீட்டின் அருகிலும் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. நீரஜும் கலந்துகொண்டார். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடியைத் தூவி அவர்கள் கொண்டாடினர். அங்கிருந்தவர்கள் மது அருந்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தலித் இளைஞரான நீரஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் விசாரித்தனர். ஆனால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது.

 ‘சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருமே 16 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை கண்டுபிடித்துவிட்டோம். வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறோம்’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com