சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தாமதமாகத் தண்ணீர் நிரப்பப்படுவதால், நோயாளிகள் தண்ணீரின்றி அவதிப்படுவது, புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதயவியல், நரம்பியல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சிறப்பு வார்டுகளை கொண்ட ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பிரதான கட்டடங்களைக் கொண்டு செயல்படும் மருத்துவமனையில் சில நாட்களாகத் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அவசர தேவைகளுக்குக் கூட தண்ணீர் தேடி அலைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகளை புதிய தலைமுறை படம் பிடித்துள்ளது.
இதையடுத்து மருத்துவமனை டீன் நாராயணசாமி அறிவுறுத்தலின் பேரில், கூடுதல் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
Loading More post
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?