தான் நடித்துள்ள பாடல் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி மலையாள நடிகை பிரியா வாரியர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓமர் லூலூ என்பவரின் இயக்கத்தில் பிரியா வாரியர் நடிக்கும் மலையாள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப்படத்தின் 'மாணிக்ய மலரே பூவி' என்ற பாடலில் பிரியாவின் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல்கள் ஒரே நாளில் வைரலானது. அத்துடன் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. ஆனால் இந்தப் பாடல் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக ஐதராபாத் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இதைத்தொடர்ந்து அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் உள்ள ஜின்சி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்யுக்கோரி நடிகை பிரியா வாரியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தான் நடித்துள்ள பாடல் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?