அரியலூரில் தக்காளி கிலோ 3ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அரியலூர் அருகே ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பொண்ணு. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றார். கொடி தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுவரும் இவர், தன்னுடைய வயலில் சாகுபடி செய்யும் தக்காளியை அரியலூர் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றார்.
முன்பு கிலோ 7 மற்றும் 5 ருபாய்க்கு விற்பனை ஆன தக்காளி, தற்போது 3 அல்லது 2 ரூபாய் விற்பதால் மிகுந்த நஷ்டம் ஏற்படுவதாகவும், கூலி வேலை ஆட்களுக்கே இந்தத் தொகை போதவில்லை எனவும் அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார். அத்துடன் கடன் கொடுத்தவர்கள் வீடு புகுந்து அடிக்க வருவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே தங்களுக்கு அரசு உதவி செய்யும் வகையில் பள்ளி சத்துணவு, அங்கன்வாடி, கோயில் அன்னதானம் மற்றும் விடுதிகளில் வாங்கும் காய்கறிகளை, நேரிடையாக தங்களிடம் வாங்கினால் தங்களின் குறைந்த பட்ச வருவாய்க்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார். இவரைப் போன்றே அப்பகுதி விவசாயிகள் பலரும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’