ஓமலூரில் மஞ்சள் செடிகளை பச்சை புழுக்கள் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டார பகுதிகளில் 500 ஏக்கர்கள் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் செடிகளை
பயிரிட்டுள்ளனர். மஞ்சள் அறுவடை காலத்தில் நல்ல விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் பலரும் கிணற்று நீர்
பாசனத்திலும் மஞ்சள் பயிரை விவசாயம் செய்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் செடிகளை பச்சை புழுக்கள்
கடுமையாக தாக்கியுள்ளது.
இதனால் மஞ்சள் செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வளர்ச்சி முற்றிலும் முடங்கியுள்ளது. எனவே மஞ்சள் சாகுபடியை சரியான
முறையில் கொண்டுவர முடியாது என்ற நிலையில், பச்சை புளுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று விவசாயிகள்
வேதனைப்படுகின்றனர். அத்துடன் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மஞ்சள் தோட்டங்களை ஆய்வுகள் செய்து, பச்சை புழுக்களின்
தாக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!