கோட்டைக்காட்டில் போராட்டம் நிரந்தரமாக வாபஸ்

கோட்டைக்காட்டில் போராட்டம் நிரந்தரமாக வாபஸ்

நெடுவாசல் அருகே கோட்டைக்காட்டில் ஹைட்ரோகார்பனுக்கு எதிரான போராட்டம் நிரந்தரமாக கைவிடப்பட்டுள்ளது. கோட்டைக்காடு பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டம் இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் செயல்படுத்தப்படாது‌ என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், விவசாயிகளைப் பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். முதலமைச்சரின் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து கூறினோம். அப்போது ஏற்கனவே தோண்டப்பட்ட 2 ஆழ்குழாய்க் கிணறுகளை மூட வேண்டும் என்று மக்களிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆழ்துளை கிணறுகளும் மூடப்படும் என வாக்குறுதி அளித்தோம். இதனைத்தொடர்ந்து போராட்டக் குழுவினர் தங்கள் போராட்டங்களை திரும்பப் பெற்றுள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com