கன்னியாகுமரி மாவட்டத்தில் மானிய விலை இருசக்கர வாகனத்திற்கான விண்ணப்பத்திற்கு 225 ரூபாய் கட்டாய வசூல் கேட்கப்பட்டதால் பொதுமக்களுக்கும் பேரூராட்சி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மானிய விலை இருசக்கர வாகனத்திற்காக விண்ணப்பிப்பதற்கு உள்ளாட்சி அலுவலகங்களில் ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். அப்போது விண்ணப்பம் ஒன்றிற்கு 225 ரூபாய் கட்டாய வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பேரூராட்சி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்கவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து கல்லுக்கூட்டம் பேரூராட்சியில், விண்ணப்பத்திற்கு வந்திருந்தவர்கள் கூறும்போது, காலை 10 மணிக்கே இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்க வந்ததாகவும் ஆனால் 12.30 மணி வரை பேரூராட்சி ஊழியர்கள் தங்களை காத்திருக்க சொன்னதாகவும் கூறியுள்ளனர். பிறகு 225 ரூபாய் அளித்தால்தான் உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். எதற்காக கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என பேரூராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது திட கழிவு மேலாண்மை திட்டத்திற்காக வசூல் செய்கிறோம் என்றும் பதிலளித்துள்ளனர்.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?