மத்திய அரசின் பட்ஜெட் ஏமற்றத்தையே அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கறுப்பு பணத்தை மீட்போம், அனைவரது வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது. அதே போல் விவசாயத்தை வரும் 2022 ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என அறிவித்துள்ளனர். கடந்த 2014 நாடளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் அறிவித்த விவசாயத்தை இரட்டிப்பு ஆக்கும் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் மத்திய அரசு உள்ளது” என கூறினார்.
மேலும், “இயற்கை சீற்றங்களால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்டும் என காத்திருந்த நிலையில் அதுவும் இல்லாதது ஏமாற்றமே. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க போராடி வரும் சூழலில் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும் என்ற அறிவிப்பால் எதுவும் நடந்து விடாது. வழக்கம் போல் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வரி விலக்கு அளித்து அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்” என்று விமர்சித்தார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்