வருமான வரி விலக்கு வரம்பை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என எஸ்பிஐ வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தியா முழுவதும் இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்புகளை
ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால், ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் வரி விலக்கு தருவது மூலம் 75
லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளது. அதே சமயம் வரி விலக்கு வரம்பு உயர்வால் அரசுக்கு ரூ.7,500 கோடி மட்டுமே
இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிச் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டிக்கு வரிவிலக்கு தரப்பட வேண்டும் என்றும், குறித்த கால வங்கி
டெபாசிட்டுகளுக்கு முற்றிலும் வரி விலக்கு வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் வாங்கியோர்
செலுத்தும் ரூ.2 லட்சம் வரையிலான வட்டிக்கு தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதை இரண்டரை லட்சம்
ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!