ஒடிசா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜோகேஷ்குமார் சிங்கின் பதவியை ரத்து செய்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டம்ன்ற தேர்தலில் ஜோகேஷ்குமார் சிங் போலி சாதிச் சான்றிதழ் சமர்பித்ததாக அவர் மீது புகார் எழுந்தது. தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் ஸாஸா, மற்றும் வாக்காளர் என்ற அடிப்படையில் அஜய் படேல் என்பவர் ஜோகேஷ்குமார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பழங்குடினர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று போலீயான சாதிச் சான்றிதழ் வழங்கினார் என்பதே குற்றச்சாட்டு.
இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், ஜோகேஷ்குமார் சிங் கண்டாயத் பூயன் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் வராது. இந்நிலையில், போலியான சாதிச் சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டு நிரூபணமானதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோகேஷ்குமார் பதவியை ஒடிசா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Loading More post
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்