விமானத்தில் செல்ஃபோன் மற்றும் இணைய தள சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கலாம் என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.
விமானத்தில் செல்லும்போது செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்த இந்திய வான்வெளியில் அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் செல்போன் சிக்னல்களால் பாதிப்பு ஏற்படும் என்றும் இவ்வாறு அனுமதிக்கப்படுவதில்லை. இதை அனுமதிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு, ட்ராயிடம் மத்திய தொலைத்தொடர்புத் துறை கோரியிருந்தது.
இதையடுத்து, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தரப்பு கருத்துகளைக் கேட்டறிந்த ட்ராய், தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில், விமானத்துக்குள் செல்ஃபோன் மற்றும் இணைய தள சேவையை பயன்படுத்த பயணிகளை அனுமதிக்கலாம் என ட்ராய் தெரிவித்துள்ளது.
3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இந்திய வான்வெளியில் பறக்கும் விமானங்களில் இந்த வசதியை தடையின்றி பெற வழியுள்ளதாகவும் ட்ராய் தெரிவித்துள்ளது.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?