மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்து உத்தரவிட்டார். ஆணையத்தில் 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி தொடர்ந்து தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உள்பட பலரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’