பிறந்து 12 நாட்களே ஆன பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த பூபதி, தனலட்சுமி தம்பதிக்கு 12 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. வேலை எதுவும் செய்யாத நிலையில், வீட்டிலேயே இருந்த பூபதி, மனைவி தனலட்சுமி கருவுற்றதில் இருந்து அதனை கலைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தரவில்லை. குழந்தை பிறந்த பிறகும் பூபதி வேலைக்கு செல்லாதது குடும்பத்தில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று குழந்தையை காணவில்லை என்று தேடிய தனலட்சுமி, குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்று காலை, அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் குழந்தையின் உடல் கிடைத்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை கொன்றதை பூபதி ஒப்புக்கொண்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பூபதி, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!