ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திரா மாநிலம் கடப்பா அருகே உள்ள கனுமலோபல்லா பகுதியில் செம்மரம் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அவ்வழியாக சென்ற வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது டேங்கர் லாரி ஒன்றை சோதனை செய்த போது, அதற்குள் 95 செம்மரக்கட்டைகளை நூதனமாக கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் செம்மரங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த கவால்துறையினர், கடத்த முயன்ற செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.2 கோடி என தெரிவித்தனர். அத்துடன் செம்மரங்களை கடத்தி வந்த 7 பேரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டேங்கர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் தொடர்பாக கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை