சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் வருமான வரி அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர்.
ஆர்.கே.நகர் தேர்தலில் வருகின்ற டிசம்பர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அதிமுக, திமுகவை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரனும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராயபுரத்தில் அதிகளவில் குக்கர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் கடைகளில் இன்று சோதனையில் ஈடுபட்டனர். வாக்களர்களுக்கு குக்கர் கொடுப்பதற்காக டோக்கன் வழங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த முறை நடைபெறவிருந்த தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் தினகரன் போட்டியிட்ட போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அவருக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டது. அப்போது, தினகரன் தரப்பினர் சார்பில் மக்களுக்கு தொப்பி வழங்கப்பட்டது. அவரும் தொப்பியுடனே வலம் வந்தார். இந்த முறை சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'