கோவை மேட்டுப்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஊருக்குள் மீண்டும் யானைகள் நுழைவதை தடுக்க கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள பகுதியில் சுற்றி வரும் யானையை நேற்று அதிகாலை முதல் வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், யானை மீண்டும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. வேட்டை தடுப்பு காவலர்களும் வனத்துறை ஊழியர்களின் பெரும் முயற்சியால் குருடிமலை வனப்பகுதிக்குள் யானை விரட்டப்பட்டது.
ஆனால், மீண்டும் யானை ஊருக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து சுஜய் என்ற கும்கியானை வரவழைக்கப்பட்டுள்ளது.குருடிமலை வனத்திற்குள் இருந்து யானை ஏதேனும் வெளியேறினால் அதனை கும்கியின் உதவியோடு அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தயாராகி வருகின்றனர். ஊருக்குள் சுற்றி வரும் யானை நேற்று தனது குட்டியுடன் தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை