ராகுல் காந்திக்கு நாட்டை வழிநடத்தும் தகுதி உள்ளது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுட் குறிப்பிட்டுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் ரவுட், சரக்கு மற்றும் சேவை வரியை திணித்த பாஜக அரசு மீது குஜராத் மக்களுக்கு அளவில்லாத கோபம் உள்ளது. இதனால், இன்று நடைபெறும் முதல்கட்ட குஜராத் சட்டசபை வாக்குப்பதிவில் பாஜக கடும் போட்டியை சந்திக்க நேரிடும். நாட்டில் மோடி அலை இல்லை என்பதை குஜராத் தேர்தல் முடிவு நிச்சயம் வெளிப்படுத்தும்.
கடந்த 2014-ம் ஆண்டு இருந்ததுபோல் விபரமறியாதவராக தற்போது ராகுல் காந்தி இல்லை. இன்று அவர் நாட்டை வழிநடத்தும் நல்ல தலைவராக முன்னேறியுள்ளார். குஜராத் மக்களுடன் அவர் பழகிய விதம், மற்றும் நாட்டு மக்களுடன் அவர் பழகும் முறை போன்ற அவரது செயல்கள், நாட்டை வழிநடத்த அவர் தயாராகி விட்டதை உணர்த்துகிறது என்று சஞ்சய் ரவுட் கூறினார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை