கேரளாவில் இதுவரை சடலமாக மீட்கப்பட்ட 8 மீனவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுகப் பகுதியில் நேற்று கரை ஒதுங்கிய 5 உடல்களில் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தூத்துகுடியைச் சேர்ந்த வின்சென்ட்டின் மகன் ஜூடு என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை திருவனந்தபுரம் பூந்துறை பகுதி மீனவர்கள் என அடையாளம் பெறப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று கரை ஒதுங்கிய 5 உடல்களில் ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற நான்கு பேரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
சடலமாக மீட்கப்பட்ட மற்ற மீனவர்களை அடையாளம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!