தமிழகத்தில் 9.5 லட்சம் விவசாயிகள் சம்பா பயிருக்கு காப்பீடு செய்துள்ளதாக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வறட்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றன. அப்போது கடன் தள்ளுபடி மற்றும் பயிர்காப்பீடுகள் குறித்து விவசாயிகள் தரப்பில் பெரும் கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்தவர்களுக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடந்த சில வாரங்களுக்கு முன் கோவையில் விவசாய நிலங்களை ஆய்வு செய்த வேளாண்துறைச் செயலாளர் ககன் தீப் சிங், விவசாயிகள் அனைவரும் பயீர்காப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த சூழலில் 2017-18 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டிய கடைசிநாள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள ககன்தீப், தமிழகத்தில் 9.5 லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ப்ரீமியம் தொகை செலுத்தும் அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் என்பது தவறு என விளக்கம் அளித்துள்ள அவர், மழை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?