இலங்கையில் 30 ஆண்டுகளாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 29 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் வசவிளான் கிராமத்தில் 29 ஏக்கர் நிலப்பகுதி இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலையத்திற்கு உட்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்தப்பகுதியிலிருந்து ராணுவம் விலகியுள்ளது. யாழ், ஆயர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக அந்தப்பகுதி விடுவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பழமையான உக்கரமாதா ஆலயம், ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்டவை திறந்து விடப்பட்டன.
30 ஆண்டுகளுக்கு பின் தங்கள் பகுதிகளை கண்ட தமிழர்கள், தங்கள் மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீருடன் புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டனர். இது போல் வசவிளான் கிராமத்தின் எஞ்சிய பகுதிகளில் ராணுவக் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழ் கலவன் பாடசாலையை மீண்டும் செயல்படச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?