இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வாக்கு மையங்களில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம், மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், பிழைகளை நீக்கவும் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
நாளை மறுநாள் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக மாலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை வீடுவீடாக பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
Loading More post
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்