நாகையில் வெள்ள நீர் வடியாததால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழை பெய்து வந்தது. இதையடுத்து மழைவிட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் வடமழை, மணக்காடு, பிராந்தியங்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அழுகி பாதிப்படைந்துள்ளன.
இப்பகுதிகளிலுள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே வெள்ளநீர் வடியாமல் இருக்கக் காரணம் என அப்பகுதி விவசாயிகள் குறை கூறுகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள பயிர்களைக் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்