அத்துமீறிய இளைஞரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த இண்டிகோ ஊழியர்

அத்துமீறிய இளைஞரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த இண்டிகோ ஊழியர்
அத்துமீறிய இளைஞரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த இண்டிகோ ஊழியர்

ஹைதராபாத் விமான நிலையத்தில் தன்னிடம் அத்துமீறிய இளைஞரை, இண்டிகோ நிறுவன பெண் ஊழியர் ஒருவர், தன் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்தார்.

ஹைதரபாத் விமான நிலையத்திற்கு குடிபோதையில் வந்த இளைஞர், அங்கிருந்த இண்டிகோ பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்திருக்கிறார். குடிகார இளைஞரை கண்டு சிறிதும் பயப்படாத அந்த பெண் ஊழியர் உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, விமான நிலைய காவல் நிலையத்திற்கு அந்த இளைஞர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்பெண்ணும் காவல்நிலையம் சென்றார். “இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டேன். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்” என அந்த இளைஞர் காவல் நிலையத்தில் மன்றாடியிருக்கிறார்.

இதனையடுத்து தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மன்னித்து விடுவேன் என அப்பெண் தெரிவித்திருக்கிறார். அதன்படி அந்த இளைஞர், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண் புகார் தராமல் சென்றுவிட்டார். விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com