முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி மேலுர் 4 வழிச்சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக மதுரை திருச்சி சாலையில் போக்குவரத்து முடங்கியது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடக்கோரி மேலூர் 4 வழிச்சாலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாவினிப்பட்டி, கிடாரிப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மதுரை மேலூர் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இதனால் திருப்பத்தூர், தஞ்சை செல்லும் வாகனங்கள் சிவகங்கை வழியாக திருப்பிவிடப்பட்டன. இதேபோன்று பிறபகுதிக்கு செல்லும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சக விசாயிகள் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே வைகை அணையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!