தமிழக அரசுப் பணிகளை 100 விழுக்காடு தமிழர்களுக்கே வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வாணையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள், நேபாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டவர், மற்றும் பாகிஸ்தான், திபெத், அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழ் தெரியாவிட்டால் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் எனவும் சலுகை வழங்கப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை கண்டிப்பதாக கூறியுள்ள வேல்முருகன், கடந்த ஆண்டு திருத்தப்பட்ட விதிமுறைகளை திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் கர்நாடகம், குஜராத், மகராஷ்டிரா மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அரசு பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கவேண்டும் என்றும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் 90 விழுக்காடு பணிகளை தமிழர்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை கண்காணிப்பு - தேர்தல் அதிகாரி
கமல்ஹாசனின் 3-வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை - வைகோ
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை