’சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமண் வெட்டியதை போல, தீபிகா படுகோன் மூக்கை வெட்டுவோம்’ என்று கர்னி சேனா என்ற அமைப்பு விடுத்த மிரட்டலை அடுத்து நடிகை தீபிகா படுகோனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கியுள்ள இந்தி படம், ’பத்மாவதி’. தீபிகா படுகோன் ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படம், ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் வரலாற்றை தவறாகச் சித்தரித்து இருப்பதாக ராஜபுத்திர சமூகத்தினர் புகார் தெரிவித்து வருகின்றனர். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
இந்நிலையில், 'பத்மாவதி வெளியாவதை, யாராலும் தடுக்க முடியாது' என, தீபிகா படுகோன் கூறியிருந்தார். இதற்கு, ராஜபுத்திர கர்னி சேனா என்ற அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அந்த அமைப்பின், தலைவர் அனுப்பியுள்ள வீடியோவில், ‛சூர்ப்பனகையின் மூக்கை, லட்சுமணன் வெட்டியது போல, நாங்கள் தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்' என மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து தீபிகாவுக்கு சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மும்பை உயர் அதிகாரி தேவன் பார்தி கூறியுள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை