நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கர்சன் பகுதியில் உள்ள கிரீன் டீ எஸ்டேட்டில், 5வது நாளாக இன்றும் விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அங்கு நான்காவது நாளாக வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், எஸ்டேட் எப்படி வாங்கப்பட்டது, அதற்கான நிதி எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கர்சன் எஸ்டேட் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பது போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் புதுச்சேரி லட்சுமி ஜுவல்லரி மற்றும் அதன் கிளைகளில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நகைக்கடை குழுமத்தின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?