மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 14,100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் சித்திரகூட் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த பிரேம் சிங் உயிரிழந்ததால், கடந்த 9ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் போட்டியிட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், சுமார் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.
இதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலன்ஷூ சதுர்வேதி, பாஜகவின் வேட்பாளர் சங்கர் தயாள் திரிபாதியை விட 14,100 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொகுதியில் உயிரிழந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரேம் சிங், 1998, 2003 மற்றும் 2013 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!