சோலார் பேனல் மோசடி புகார் மீதான விசாரணை அறிக்கையை, கேரள சட்டசபையில் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தாக்கல் செய்தார்.
கேரளாவில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் விற்பனை செய்ததில், தொழிலதிபர் சரிதா நாயர் மோசடி செய்ததாக கடந்த 2013ஆம் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அன்றைய முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை நடத்த, உம்மன் சாண்டி ஆணையம் அமைத்தார்.
இதையடுத்து 2016ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பினராயி விஜயன் முதலமைச்சரானார். எனவே சிவராஜன் விசாரணை அறிக்கையை தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்க, அதை அவர் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மீதும், அவரது அலுவலக அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்போதைய உள்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த புகார்களை சட்டப்படி சந்திப்போம் என எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?