ஐசிசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை விராத் கோலி படைத்துள்ளார். அவர் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற தொடரில் வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் ஒருநாள் தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து பெற்ற 7வது தொடர் வெற்றியாகும். இத்தொடரில் இந்திய கேப்டன் விராத் கோலி ரன் மெஷினாக செயல்பட்டார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.
899 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியுள்ள விராத், ஐசிசியின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், 1988ஆம் ஆண்டில் 887 புள்ளிகள் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது. இதை கோலி முறியடித்துள்ளார்.
இத்தொடரில் பந்துவீச்சில் கலக்கிய பும்ரா, ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை