கூடலூர் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக காரில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தபடுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தமிழக-கேரளா எல்லையில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாடுகாணி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற கேரளா பதிவெண் கொண்ட காரை சோதனை செய்ய சென்றுள்ளனர்.
போலீசார் வருவதை கண்ட கார் ஓட்டுனர், காரை வேகமாக ஒட்டி தேவாலா பகுதிக்கு சென்று, காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். காரை விரட்டி சென்ற போலீசார், சோதனை செய்த போது காரில் சுமார் 30க்கும் மேற்பட்ட மூட்டைகளில், தனியார் அரசி ஆலைகளின் பெயரில் உள்ள பைகளில் ரேஷன் அரிசி கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த போலீசார், தப்பி சென்ற கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
Loading More post
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?