அதிமுக எம்எல்ஏக்களை சுதந்திரமாக நடமாட விடக்கோரி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்எல்ஏ புகார் மனு அளித்துள்ளார்.
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வெளியுலக தொடர்பு இன்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் அனைவரையும் சுதந்திரமாக நடமாட விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தங்களிடம் மிரட்டி கையெழுத்து பெற்றதாகவும், இதனால், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை, காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும், கூடுதல் ஆணையர் சங்கர், பெற்றுக்கொண்டதாவும், பின்னர் பேசிய சண்முகநாதன் தெரிவித்தார்.
அதிமுக-வில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா தலைமையில் அதிமுக-வினர் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதில் சண்முகநாதன் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!