பெட்ரோல், டீசல் விலை குறைய மத்திய அரசு போல், மாநில அரசுகள் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல் விலை கடந்த 2 மாதங்களில் லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் அதிகரித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வெளியான நிலையில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியைக் குறைக்க வலியுறுத்தி, மாநில அரசுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியில் மாநிலங்கள் 5 சதவிகிதத்தை குறைத்தாலே மக்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!