தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில், 84 சதவிகித மாவட்டங்களில் சராசரி மழையளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் காலநிலைக்கு ஏற்ற பயிர்களையிட்டு அதிக விளைச்சலை பெறலாம் என கோவையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பின்படி, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் சராசரி மழையளவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படும் இடங்களில் தற்போதைய வேளாண் தொழில்நுட்பங்களை வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுடன் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம் எனவும், குறைவான மழை பெய்யும் பகுதிகளில் பாசன நீர் அளவை பொறுத்து பயிர் சாகுபடி செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அதிகளவிலான வறட்சி நிலவி வந்ததால் விவசாயம் பொய்த்து போனதன் காரணமாக அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 756 மில்லி மீட்டர் மழையளவும், குறைந்த பட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 262 மில்லி மீட்டர் மழை அளவும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?