தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், உறுதியாக நல்லது நடக்கும் என கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக-வினர் பிரிந்து உள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுடன் ஆளுநரை சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பி.ஹெச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆளுநர் சந்திப்புக்குப் பின் வீடு திரும்பிய முதலமைச்சர் பன்னீர் செல்வம் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியோடு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விபரங்களையும் விரிவாக பேசி வந்திருக்கிறோம். உறுதியாக நல்லது நடக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் உறுதியாக தர்மமே வெல்லும் என்று கூறினார்.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி