ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார்.
மும்பையில் இருந்து காலையில் புறப்பட்ட ஆளுநர், 10.45 மணியளவில் சென்னை வந்தடைந்தார். கடந்த வாரத்தில் சென்னை வந்த அவர், ஓரிரு நாளில் மும்பை திரும்பினார். மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.
இதுதவிர ஆளுநர் வித்யாசாகரிடம் விசாரணை நடத்த வேண்டும், அவர் ஜெயலலிதா கை விரலை அசைத்துக் காட்டினார் என்று கூறியது எவ்வாறு என்றும் அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள சூழலில் ஆளுநர் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி