பெண்களுக்கான33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுமாறு, பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் பாரதிய ஜனதாவுக்கு உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி, மசோதாவை நிறைவேற்றுமாறு, சோனியா காந்தி பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 1989 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவர முயற்சி மேற்கொண்டும் அது நிறைவேறாமல் போனதை சோனியா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி மாநிலங்களவையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. ஆனால், மக்களவையில் இன்னும் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?