நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நழுவிச் சென்ற கிரிக்கெட் மட்டை தாக்கியதில் காயமடைந்த மாணவன் விஸ்வேஷ்வரன் உயிரிழந்தான்.
சித்தபூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் விஷ்வேஸ்வரன் விட்டாம்பாளையம் ஆதிதிராவிடர் நலவிடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த திங்கட்கிழமை அன்று மாணவன் விஷ்வேஸ்வரன் நண்பர்கள் மற்றும் ஆசிரியர் குப்புசாமியுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக ஆசிரியர் குப்புசாமி கையிலிருந்த கிரிக்கெட் மட்டை நழுவிச் சென்று விஷ்வேஸ்வரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்ற மாணவன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் விஸ்வேஷ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இது குறித்து உயிரிழந்த மாணவனின் பெற்றோர் கூறுகையில், “மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் படித்து வந்தான். இந்த சம்பவத்தை விபத்தாக பதிவு செய்யாமல், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!