வறட்சி காரணமாக குறுவை சாகுபடியை இழந்த டெல்டா பாசன விவசாயிகள், அவ்வப்போது பெய்துவரும் மழை காரணமாக தெளிப்பா, நடவா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் டெல்டா மாவட்டங்களில் முன் தயாரிப்பு கூட்டம் நடத்தப்படுமா என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து விளைநிலங்களை ஈரப்படுத்தியுள்ளது. வழக்கமாக அக்டோபர் மாதம் மத்தியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். அதற்கு முன்பாக பயிர் வளர்ந்தால்தான், மழையால் பாதிக்கப்படாமல் பயிரை பாதுகாக்க முடியும். அதற்கு தற்போதைய நாளை கணக்கிட்டால் 150 நாள் வயதுடைய சிஆர்1050 போன்ற ரகங்களை இனி பயிரிடமுடியாது. அதேநேரத்தில் குறுகிய கால ரகங்களை பயிரிட வேண்டுமானால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு எப்போது என்று தெரியாத நிலை நிலவுகிறது
இதுகுறித்து விவசாயி செந்தில்குமார், மேட்டூர் அணையில் எப்போது தண்ணீர் திறப்பு இருக்கும்? தெளிப்பு செய்யலாமா அல்லது நடவு செய்யலாமா என்ற ஆலோசனையும் வழங்காமல் வேளாண்மைத்துறை உள்ளதாக கூறினார்.
சாமியப்பன் கூறும்போது, சம்பா சாகுபடி காலம் நெருங்கிவிட்ட நிலையில் மேட்டூர் அணைதிறப்பு தேதியை முன்கூட்டியே அறிவித்தால் விவசாயிகள் சாகுபடிக்கு தயாராக வாய்ப்பாக இருக்கும். இதற்கு ஏற்ப உடனடியாக சம்பா சாகுபடி முன்தயாரிப்பு கூட்டங்களை நடத்தவேண்டும் என்று கூறினார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி