அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தடை உத்தரவால் நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் அந்நாட்டு கிரிக்கெட் வீரர் பஹாத் பாபர் மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிலிருந்து அவசரமாக நாடு திரும்பினார்.
சிரியா, லிபியா உள்ளிட்ட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க 90 நாட்களுக்குத் தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக உலகின் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்தநிலையில், ட்ரம்ப்பின் தடை உத்தரவால் ஐசிசி அமெரிக்காஸ் அணிக்காக விளையாடி வரும் வீரர் பஹாத் பாபர் பாதிக்கப்படலாம் என்று அவரது வழக்கறிஞர் அச்சம் தெரிவித்தார். இதனால் மேற்கிந்தியத் தீவுகளில் அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் நடத்தி வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த பாபர், உடனடியாக அமெரிக்கா திரும்பினார். பாகிஸ்தானின் பிறந்த பாபர், 14 வயதில் இருந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஐசிசி விதிமுறைப்படி 7 ஆண்டுகள் விசா கிடைக்கப்பெற்றுள்ள பாபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ட்ரம்ப் உத்தரவால் சிக்கல் ஏற்படும் என்று கருதியதால், அவர் நாடு திரும்பியதாக ஐசிசி அமெரிக்காஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?