ஜி.எஸ்.டி வணிக உச்சவரம்பை 50 லட்சம் ரூபாயாக மாற்ற வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகளின் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவதாகவும், இது குறித்து 8 மாநிலங்களை சேர்ந்த வணிகர்களின் பிரதிநிதிகள் மத்திய நிதியமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். கேரளாவில் வரும் 20 ஆம் தேதிக்கு மேல் வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் தாமத கட்டணத்திற்கு கந்துவட்டி வசூல் போல் தினமும் கூடுதல் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் ரூபாய் 20 லட்சம் வணிகம் நடைபெற்றால் வரிவிதிக்கப்படும் என்பதை மாற்றி ரூபாய் 50 லட்சமாக அதிகரிக்க வேண்டும். மேலும் ஜி.எஸ்.டி எண் இல்லாத சிறுவியாபாரிகளுக்கு சரக்கு முகவர்கள் வியாபாரிகளின் முகவரி கொண்டு சரக்குகளை விநியோகம் செய்யவேண்டும் என்றார்.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்