பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், புதிதாக ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு, பொதுமக்களுக்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டை வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புதிய 1000 ரூபாய் நோட்டில் சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என்றும், புதிய நோட்டுக்கள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் இந்த நோட்டுக்கள் மைசூரு மற்றும் சல்போனியில் அச்சடிக்கப்பட உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சமீபத்தில் புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடதக்கது. விரைவில் புதிய 1000 ரூபாய் நோட்டுகளும் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'