மீண்டும் கமலோடு இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாக பரவிய தகவலுக்கு நடிகை கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த கவுதமி, சில மாதங்களுக்கு முன் அவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் கமலோடு கவுதமி இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகவும், அவருடன் நெருக்கம் காட்டுவதால், மீண்டும் கமலும், கௌதமியும் இணைய இருப்பதாகவும் வீடியோ செய்தி ஒன்று வெளிவந்தது. அந்த வீடியோவை வெளியிட்டு அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள்ள கவுதமி ‘முட்டாள்கள் அர்த்தமற்று பேசுகிறார்கள். நாய்கள் குரைக்கும். நான் விலகி வந்துவிட்டேன். எல்லோரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளதான் வேண்டும். எது முக்கியமோ அதை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?