ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையின் போது, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக காவலர்கள் மீது புகார் கூறப்படுவது குறித்து விசாரணை செய்து சம்பவம் உண்மையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டிற்காக அறவழியில் தொடங்கிய போராட்டமானது வன்முறையில் முடிந்தது. போராட்டத்தின் கடைசி நாளான கடந்த 23-ஆம் தேதி, சென்னை மெரினாவில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த வன்முறை சம்பவத்தின் போது, போலீசாரே வாகனங்களுக்கு தீ வைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் கூட, சமூக வலைத்தளங்களில் வெளியானது. போலீசார் தான் வன்முறை சம்பவங்களுக்கு காரணம் எனவும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, ஜல்லிக்கட்டு வன்முறை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர், போராட்ட வன்முறையின் போது, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக காவலர்கள் மீது புகார் கூறப்படுவது குறித்து விசாரணை செய்து சம்பவம் உண்மையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், போராட்ட வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்யும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
Loading More post
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!