தென் ஆப்பிரிக்காவில் மாடல் அழகியை தாக்கி காயப்படுத்திய ஜிம்பாப்வே அதிபரின் மனைவி மீது ஜோனஸ்பர்க் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே-ன் 2-வது மனைவி கிரேஸ் முகாபே. இவர் தனது இரு மகன்களுடன் தென் ஆப்பிரிக்கா சென்று இருந்தார். ஜோனஸ்பர்க்-ல் உள்ள லோகன்ஸ் பார்க் ஓட்டலில் தங்கியிருந்தபோது கபிரியல்லா ஏஞ்சல்ஸ் என்ற 20 வயது மாடல் அழகியின் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார். தன்னுடைய மகன்களை சந்தித்து மாடல் அழகி பேசியதால் ஆத்திரம் அடைந்து கிரேஸ் முகாபே தாக்கியதாக கூறப்படுகிறது.
மாடல் அழகி கபிரியல்லா ஏஞ்சல்ஸ் அளித்த புகாரின் பேரில், ஜோன்ஸ்பர்க் போலீசார் முகாபே மனைவி கிரேஸ் மீது வழக்குபதிவு செய்தனர். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் கிரேஸ் முகாபே திடீரென ஜிம்பாப்வே திரும்பி விட்டார்.
Loading More post
'பருவமழை பொய்க்காது!' - கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள் மீண்டும் கைகொடுக்க வாய்ப்பு
பாகிஸ்தானில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூட்யூப் சேவை தற்காலிக முடக்கம்!
கொரோனா 2ஆம் அலை தீவிரம்; ப்ளஸ் 2, கல்லூரி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
"நாள் ஒன்றுக்கு 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்” - சென்னை காவல் ஆணையர்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்