முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com