கேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் நேற்றிரவு வெட்டிக் கொல்லப்பட்டார். 34 வயதான ராஜேஷை ஒரு கும்பல் துரத்திச் சென்று வெட்டிக் கொன்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெறிச்செயலில் ராஜேஷின் ஒரு கை துண்டிக்கப்பட்டது.
கொலையாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுவதாக கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ராஜேஷ் கொலையின் பின்னணியில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
கேரளாவில் பாஜகவின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாமல், அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை இடதுசாரி கட்சியினர் கூலிப்படையை ஏவி கொலை செய்வதாக கேரள பாஜக தலைவர் குமணம் ராஜசேகரன் குற்றம்சாட்டியுள்ளார். ராஜேஷ் படுகொலையைக் கண்டித்து கேரளாவில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு